தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி, மதுரை மாநகர காவல் ஆணையர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பியாக ஐ.பி.எஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார்.
குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டி.ஜி.பியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்படுகிறார். சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக ராஜீவ்குமார் நியமிக்கப்படுகிறார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பால நாக தேவி நியமிக்கப்படுகிறார்.
மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்படுகிறார். காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமிக்கப்படுகிறார். திருச்சி காவல் ஆணையராக காமினி நியமனம் செய்யப்படுகிறார். திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்யப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்படுகிறார்.
வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை டி.ஐ.ஜியாக நியமிக்கப்படுகிறார். புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக தலைமையிட இணை ஆணையர் சாமுண்டேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்படுகிறார். சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.