/tamil-ie/media/media_files/uploads/2017/06/A641.jpg)
பேரறிவாளன் பரோல் பற்றி இன்று சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தயங்குவது ஏன்? பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசுதான் பரோல் வழங்கியது. அதேபோல் பேரறிவாளனுக்கும் தமிழக அரசு பரோல் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானமும் அவர் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தததற்கு அ.தி.மு.க அதரவு எம்எல்ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நீட் தேர்வு குறித்து தி.மு.க வின் துரைமுருகன் பேரவையில் கேள்வியெழுப்பினார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது ; நீட் தேர்வால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.