அனைத்து தமிழக அரசு பணியிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக அதிகரித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.