சென்னையில் இருந்து இ.பாஸ் வாங்காமல் கோவை ஜி.ஆர்.டி நகைக்கடையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நகைக்கடை ஊழியர்களிடம் நேரடி தொடர்பில் இருந்த சகஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடங்கிய பட்டியலை சுகாதாரத் துறை தயாரித்து வருகிறது.
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள ஜி.ஆர்.டி நகைக்கடையில் பணியாற்றிய 48 ஊழியர்கள், கோயம்புத்தூர் கிராஸ் கட் ரோட்டில் அமைந்துள்ள அதன் மற்றொரு கடையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் சென்னையில் இருந்து கோவை செல்வதற்குத் தேவைப்படும் இ-பாஸ் எதையும் வாங்கவில்லை. மேலும், சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த 48 ஊழியர்களும் கடந்த ஜூன் 18ம் தேதி கோவை வந்ததாக அறியப்படுகிறது. இதில், மூன்று பேருக்கு தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், இ-பாஸ் வாங்கி கொண்டு முறையாக வந்த ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, சென்னையில் இருந்து வந்த கோவை ஜிஆர்டி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறிய நடவடிக்கையாக, கோவை ஜி.ஆர்.டி நகைக்கடை சீல் வைக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஜூன் 20ம் தேதி அறிவித்தார்.
அனைத்து ஊழியர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
3 employees of GRT Jewellers who came from Chennai's Usman Rd branch to Coimbatore branch on June 18 test +ve for #COVID19. 48 employees from the Chennai branch came here on June 18. Authorities say that they worked with the online sales section of the jewellery group. @THChennai
— Wilson Thomas (@wilson_thehindu) June 21, 2020
4 ஜி.ஆர்.டி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கோவை மக்களுக்கு கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.