கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் 7 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால், யானை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: அரசுப் பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல – அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
அதிகாலையில் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சோளக்காட்டுக்குள் புகுந்து, அதே பகுதியில் முகாமிட்டு இருப்பதால் அருகில் உள்ள குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil