Advertisment

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 90% பேர் “கோச்சிங்” வகுப்புகளுக்கு சென்றவர்கள் - தமிழக அரசு

இது ஒரு தலைமுறை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை முன்னுரிமை பெற்ற , பணக்கார, நகர்ப்புற சமூகத்திடம் இருந்து உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
90% who cleared NEET took coaching: Tamil Nadu study

Arun Janardhanan

Advertisment

90% who cleared NEET took coaching: மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் நீட் தேர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்றை உருவாக்கியது. நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சமர்பித்த பரிந்துரைகளில், 2020ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90% பேர் பயிற்சி மையங்களில் முறையான பயிற்சி பெற்றவர்கள் என்றும், அதில் நான்கில் மூன்று பங்கினர் (71%) பேர் நீட் தேர்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதிய நபர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஒன்றை கடந்த வாரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது மாநில அரசு. மேலே கூறிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நீட் வெற்றிகரமாக இருந்தது. இதில் பலர் நீண்ட காலமாக பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

நகர்புற மற்றும் பணக்கார மாணவர்களுக்கு நீட் ஆதரவாக உள்ளது என்று கூறிய கமிட்டி, இது ஒரு தலைமுறை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை முன்னுரிமை பெற்ற , பணக்கார, நகர்ப்புற சமூகத்திடம் இருந்து உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாறுபட்ட சமூக கட்டமைப்பின் அடிமட்ட உண்மைகளிலிருந்து நன்கு விலகி இருக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளி தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது இந்த கமிட்டி.

இது மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பிரிவை மோசமாக்கியது என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, உயர் மனித மேம்பாட்டு குறியீடு (High Human Development Index (HDI)) கொண்ட மாவட்டங்களை குறைந்த மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்து அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. ஆரோக்கியமான பிறப்பு விகிதம், கல்வி தரம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மனித மேம்பாட்டு குறியீடு வரையறுக்கப்படுகிறது.

2013 மற்றும் 2021 காலகட்டத்திற்கு இடையே, உயர் மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட மாவட்டங்களில் (நகர்ப்புற மற்றும் பெரும்பாலும் பயிற்சி மையங்களை அணுகும் சக்தி கொண்ட) இருந்து வரும் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் , நீட் தேர்வுக்கு முந்தைய மாநிலத்தில் மருத்துவ இடங்களில் 1.71% பங்கைக் கொண்டிருந்தது. நீட்டுக்கு பிறகு அது 0.73% ஆக குறைந்த்து. ஆனால் உயர் மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட சென்னையில் மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் 3.54%-ல் இருந்து 10.76% ஆக அதிகரித்தது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் தலைமுறையாக படிக்கும் மாணவர்களின் சேர்க்கை 9.74% ஆக குறைந்தது. கிராமப்புற மற்றும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மாணவர்களின் சேர்க்கை முறையே 12.1% மற்றும் 10.45% ஆக குறைந்தது.

நீட்டுக்கு பிறகு அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்களின் விகிதம் 43.03%-ல் இருந்து 35.94% ஆக குறைந்தது.

தமிழகத்தில் 31 அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளையும் 413 இடங்களையும் கொண்டுள்ளது. இது மற்ற மாநிலங்களில் இருக்கும் இருக்கைகளைக் காட்டிலும் மிகவும் அதிகம். அனைத்திந்திய மாணவர் சேர்க்கைக்காக இடம் ஒதுக்கப்படுவதால், தமிழக மாணவர்களுக்கான இடம் குறைந்துள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை அறிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் 8.12% முதல் 2020-21-இல் 71.42% வரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மாணவர்கள் தேர்வு எழுதியதை சுட்டிக் காட்டி, கற்றல் தொலைந்துவிட்டது. ஆனால் தேர்வு எடுக்கும் பயிற்சிக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருவதால், வருங்காலத்தில் மாணவர்கள் சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு, அவர்களின் அறிவுசார் மற்றும் பகுத்தறிவு மனப்பான்மையை தங்கள் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளலாம், இறுதியில் அவர்கள் சுகாதார அமைப்பில் ஒரு நீட்டிக்கப்பட்ட இயந்திரமாக மாறிவிடுகிறார்கள் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

5 வருட பயிற்சி வகுப்புகள், இரண்டு வருட பயிற்சி வகுப்புகள், இரண்டு மாத பயிற்சி திட்டங்கள் என்று பல கோடி மதிப்பில் புரளும் பயிற்சி நிறுவனங்கள் தான் அதிக அளாவில் உருவாகியுள்ளது என்று கமிட்டி கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment