Advertisment

மதுகுடிக்க பணம் கொடுக்காத மனைவி.. கட்டடத்தில் இருந்து குதித்த கணவன்.. குமரியில் பரபரப்பு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் மது குடிக்க பணம் கொடுக்காததால், கட்டடத்தில் இருந்து குதித்த கணவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

author-image
WebDesk
New Update
A case of attempted suicide has been registered against a person who jumped from a building in Kanyakumari

கன்னியாகுமரியில் கட்டடத்தில் இருந்து குதித்த ரதீஸ்

கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம் இடையேயுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

Advertisment

இந்த இடத்தில் பார்கள் அதிகமாக உள்ளன. இதைப் பார்த்த ரதீஸிற்கு குடிக்க ஆசை பீறிட்டுள்ளது. இதையடுத்து மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவர் பணம் கொடுக்க மறுத்த நிலையில் இன்று காலை விடுதி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ரதீஸிடம் சமாதானம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் ரதீஸ் கீழே குதித்தார். எனினும் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். அவருக்கு உடலில் சில காயங்கள் ஏற்பட்டன.

ரதீஸ் மீது தற்கொலைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணி ஒருவர் கட்டடத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment