சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் மூன்றாவது தளத்தில், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ளது ஃபோரம் விஜயா மால். பிரபலமான இந்த மாலுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்று(செவ்வாய் கிழமை) ஃபோரம் மாலின் மூன்றவாது தளத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொண்ட அந்த நபரின் பெயர் யுவராஜ் என்றும், அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
சென்னை சாலி கிராமத்தில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஃபோரம் விஜயா மாலில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.