Advertisment

ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வு? விளக்கம் கொடுத்த நிர்வாகம்

ஆவின் பச்சை நிற 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aavin explains on 5 liter green milk packet price hike Tamil News

ரூ.210 க்கு விற்பனையாகி வந்த ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ரூ.10 உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில் ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 1 லிட்டர் பாக்கெட்டாகவும், வணிக நிறுவன பயன்பாட்டுக்கு 5 லிட்டர் பாக்கெட்டாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ரூ.44 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு 5 லிட்டர் பால் பாக்கெட் ரூ.210 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Advertisment

இந்த நிலையில் 5 லிட்டர் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை இன்று ரூ.10 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.210 க்கு விற்பனையாகி வந்த ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ரூ.10 உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில் ரூ.220 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:-

"ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு என்று ஊடகங்கள் மூலமாக செய்தி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூபாய் 44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால் ரூபாய் 210-க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே வணிக நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்பொழுது ரூபாய் 210 (425=210) லிருந்து ரூபாய் 220 (445=220) ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதனை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது. உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Aavin Aavin Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment