தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திட வேண்டும் என நடிகர் விஷால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்இந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால், தமிழகத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உத்திரபிரதேசம், மகாராஷ்ர மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையறிந்து பஞ்சாப் மாநில அரசும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளது. அதன்படி மற்றமாநிலங்களைப் போல தமிழகத்திலும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வருங்காலத்தை வளமையாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.