Advertisment

ஓ.பி.எஸ் மாநாட்டில் கத்தியுடன் சுற்றிய நபர்; கடும் பரபரப்பு

திருச்சியில் நடைபெற்ற ஓ.பி.எஸ் மாநாட்டில் மர்ப நபர் கத்தியுடன் சுத்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
ops tirchy

திருச்சியில் நடைபெற்ற ஓ.பி.எஸ் மாநாட்டில் மர்ப நபர் கத்தியுடன் சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிர மடைந்து வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இ.பி.எஸ்  தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார். இநிந்லையில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து  அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனி நீதிபதி அமர்வு ஓ.பி.எஸ்-யின் எல்லா மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதற்கு எதிராக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது விசாரணை நிலையில் இருக்கிறது.

publive-image

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளாரக ஏற்றுக்கொள்ள கூடாது என்று மனு அளித்தார்.

publive-image

இந்நிலையில் திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதில் அதிகமானோர் பங்கெடுத்தனர். இந்த கூட்டத்தில் கைத்தியுடன் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். போலிசார் அவரை மேடைக்கு பின்புறத்தில் அழைத்துச் சென்றுச் சென்று விசாரித்தனர். இந்நிலையில் தொண்டர்கள் அங்கே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment