விஷச் சாராய சாவுகள்: ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த அ.தி.மு.க

தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி, சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
governor rn ravi

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த 22பேர் கள்ளச்சாராயம் அருந்தி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி, சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு ஒப்படைத்து, சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

Advertisment
Advertisements

விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அ.தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Aiadmk Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: