Advertisment

ஆட்சியை கலைக்க வேண்டும்... மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: சூலூர் எம்.எல்.ஏ பரபர

நல்ல படியாக ஆட்சி செய்ய முடிந்தால் ஆட்சி செய்யலாம், அல்லது மக்களின் தீர்ப்புக்கு விடலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு : சூலூர் எம்.எம்.ஏ பரபர

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் இரு அணிகளுக்கும் வாக்களிக்க மாட்டேன் என கோவை சூலூர் எம்.எல். ஏ தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுக-வில் தொடர்ந்து வரும் பிரச்சனை உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்துவிட்ட நிலையில், டிடிவி தினகரன் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்த நிலையில், அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயருக்கு அரசு கொறடாபரிந்துரை செய்தார். அதன்படி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால், கட்சியை பிளவுபடுத்தியும், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து கொண்டு, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என டிடிவி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கோவை சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

Kanakaraj, Covai, AIADMK,

அப்போது அவர் கூறும்போது:

சசிகலா சிறையில் இருப்பதால் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு உள்ளது என்றும், அதனால் சசிகலாவை சிறிது காலத்திற்கு நீக்கிவிட்டு, பின்னர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் சேர்க்கலாம் என பேச்சுவார்தை நடத்தியிருக்கலாம்.

கட்சிக்கு அவப்பெயர்

சில வாரங்களுக்கு முன்னர் ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை, ஊழல் அரசு என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சித்து வந்தார். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து கொண்டார், இதன் மூலம் ஓ பன்னீர் செல்வம் சுத்தமான ஊழல் துணை முதலமைச்சர் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. ஊழல் ஆட்சி என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஓ பன்னீர் செல்வத்தை தற்போது துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அழகு பார்ப்பது தவறு.

ஆட்சி கலையும்

நான் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர், ஆனால், ஓ பன்னீர் செல்வத்திடம் தொகுதி மேம்பாட்டுக்காக ஏதேனும் உதவி கேட்டால் அவர் செய்துதருவாரா? அவர் என்னை சந்தேகக் கண்ணுடனே பார்ப்பார். ஒன்றாக இணையும் அதிமுக-விற்கு தான் எனது ஆதரவு இருக்கும். அவ்வாறு ஒன்றிணையாவிட்டால் ஆட்சி கலையத் தான் செய்யும். பின்னர் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

OPS, Sasikala, AIADMK, O Panneerselvam

வாக்களிக்க மாட்டேன்

திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், நான் அதிமுக பக்கம் தான் இருப்பேன். அதிமுக-வே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், நான் இரண்டு அணிக்கும் செல்ல மாட்டேன். இரண்டு அணியினருமே எனக்கு தேவை எனவே, நான் எந்த அணிக்கும் செல்ல மாட்டேன். முன்னதாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்ததால், ஓ பன்னீர் செல்வம் அணியினரை இழந்தேன். அனதால், தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து டிடிவி தினகரன் அணியினரை இழக்க முடியாது.

கட்சியில் சரியான தலைமை இல்லை

யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கேயும் சால்வை போடுகிறார்கள். அங்கேயும் சால்வை போடுகிறார்கள். ஒருவேளை டிடிவி தினகரன் பலம் கட்சியில் ஓங்கிவிட்டால் என்ன செய்வது என்பற்காக, டிடிவி தினகரனுனை விரும்பாவிட்டாலும் அவருக்கு சால்வை போருவதாகவே கருதுகிறேன்.

sasikala

கட்சியில் சரியான தலைமை இல்லை என்பது தான் உண்மை. சிறையில் உள்ள சசிகலாவை பொதுச்செயலாளர் என்று குறிப்பிடுவதை டிடிவி தினகரன் தரப்பு தவிர்க்க வேண்டும். அவர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் வேண்டுமானால் சசிகலாவை பொதுச்செயலாளராக வைத்துக் கொள்ளலாமே.

கட்சியின் நடவடிக்கை எங்களுக்கே தெரியவில்லை

கூவத்தூரில் இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். சிறைக்கு செல்வதற்கு முன்னர் சசிகலா கூறும்போது, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காக தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் தங்கியிருந்து, ஆட்சியை நிலைக்க வைத்தோம்.

டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களும் இந்த கேள்வியை தான் எழுப்புகின்றனர். கட்சியை முடக்கிய ஓ பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு முன்னர் 19 எம்.எல்.ஏ-க்களிடம் கேட்டிருக்கலாம். கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது என்னவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர்களான எங்களுக்கே தெரியவில்லை

ஜெயலலிதா இருந்தால் இப்படி பேட்டி கொடுக்க முடியாது

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது இது போல யாராவது பேட்டி கொடுக்க முடியுமா? எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அப்போதே அவர் கட்சியில் இருநது நீக்கப்பட்டிருப்பார். கடையாணி இல்லாத வண்டியாக அதிமுக சென்று கொண்டிருக்கிறது. சென்றால் சென்று கொண்டே இருக்கும், அல்லது விழுந்தால் விழுந்தது தான்.

J Jayalalithaa , AIADMK

நல்ல படியாக ஆட்சி செய்ய முடிந்தால் ஆட்சி செய்யலாம், அல்லது மக்களின் தீர்ப்புக்கு விடலாம். ஜெயலலிதாவின் ஆட்சி நல்லாட்சி, முதலமைச்சர் வேட்பாளர், தொகுதி வேட்பாளர் ஆகியவற்றை பார்த்து பின்னர் மக்கள் தீர்பளிக்கட்டும். ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது, எனினும் பல அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். எனவே, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment