/tamil-ie/media/media_files/uploads/2017/06/Karunas.jpg)
மாட்டிறைச்சி விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என கூறி அதிமுக-வின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பசுவதை சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்களின் எண்ணம் என்னவோ அதன்படியே அரசு செயல்படும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தீர்ப்பு வெளிவந்த பிறகே தமிழக அரசு இது தொடர்பாக முடிவெடுக்கும் என்று கூறினார்.
ஆனால், முதலமைச்சரின் இந்த பதில் திருப்திளிக்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றாவிட்டாலும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறி திமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.
ஆனால், முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனகூறி அதிமுக-வின் ஆதரவு எம்எல்ஏ-க்களும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. தமீமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். அதிமுக ஆதரவு எம்எல்-க்கள் மூவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறையாகும்.
நேற்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.