Advertisment

தோழமைக் கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது: டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள்

தோழமைக் கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thanga tamilselvan joins dmk?

தோழமைக் கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் சட்டப்பேரவை செயலரை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சந்தித்து விளக்கமளித்திருந்தனர். ஆனால், இந்த விளக்கம் இடைக்கால பதிலாகவே கருதப்படும் என தெரிவித்த சபாநாயகர் தனபால், 19 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், செப்டம்பர் 5-ம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் தலைமைச் செயலகம் வந்தனர். மேலும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனையும் அவர்கள் சந்தித்து பேசினார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரியதாக விளக்கமளித்தனர். மேலும், அரசு கேபிளில் ஜெயா தொலைகாட்சி இருட்டடிப்பு செய்யப்படுவதாக தலைமை செயலாளரிடம் புகார் அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்கள், இன்று நடைபெற்ற கூட்டத்தில் 110 எம்எல்ஏ-க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய தோழமை கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment