தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த பெட்ரோல் பங்குகளை அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை மாவட்டம் இரும்புத் தலை, திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகை மாவட்டம் கோவில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய 10 பகுதிகளில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Amma petrol bunk will be started in 10 places says tamilnadu government
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி