நீட் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை: வீடியோ இணைப்பு

கூட்டத்தை சமாளிப்பது போன்று, பெண் காவலரின் அங்கங்களை, தகாத இடங்களில் தொட்டு அந்த உயர் அதிகாரி தள்ளுகிறார். இந்த காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

கூட்டத்தை சமாளிப்பது போன்று, பெண் காவலரின் அங்கங்களை, தகாத இடங்களில் தொட்டு அந்த உயர் அதிகாரி தள்ளுகிறார். இந்த காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET, Anitha

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது உடன் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு காவல்துறை உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டும், முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment
Advertisements

அந்த வகையில், கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த பெண் காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படி பெண் காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த போது தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பெண் காவலர் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த உயர் காவல் அதிகாரி ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை தருகிறார். கூட்டத்தை சமாளிப்பது போன்று, பெண் காவலரின் அங்கங்களை, தகாத இடங்களில் தொட்டு தள்ளுகிறார். இந்த காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், அதிகாரியின் கையை தனது உடலில் இருந்து அப்பெண் காலவர் அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார். இந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது. ஆனால், மீண்டும், மீண்டும் அப்பெண் காவலரை தொடுவது, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்று தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் துனை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்றும், அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர் உதவி ஆணையர் ஜெயராமன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், ஜெயராமனிடம், காவல் துறை துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. விசாரணை அதிகாரி லட்சுமி மிகவும் கண்டிப்பானவர் என்றும், விசாரணையின் முடிவில் ஜெயராமன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன.

காவல்துறை அதிகாரி ஒருவர், உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு பொது இடங்களில் வைத்தே இது போன்று பாலியல் தொல்லை தருகிறார் என்றால், பணி புரியும் இடத்தில் எந்த அளவிற்கு அத்துமீறி இருப்பார் என்ற கேள்வி எழுகிறது? அதேபோல், பாதுகாப்பு பணிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு பெண் காவலர் செல்ல வேண்டியிருக்கும், அங்கெல்லாம் இந்த உயர் அதிகாரி அத்துமீறலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என எப்படி கூற முடியும்? காவல் அதிகாரி ஒருவர், பெண் காவலருக்கே பாலியல் தொல்லை தருகிறார் என்றால், இவர் எப்படி நாட்டில் உள்ள மற்ற பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்? என்ற பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது. மேலும், பணிபுரியும் பெண்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Neet Coimbatore Anitha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: