அப்துல் கலாம் மணி மண்டபம் : வியப்பில் ஆழ்த்தும் விஷூவல் காட்சிகள்

அப்துல் கலாம் மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் புகைப்படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்துல் கலாம் மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் புகைப்படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
அப்துல் கலாம் மணி மண்டபம் : வியப்பில் ஆழ்த்தும் விஷூவல் காட்சிகள்

மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் ஜூலை 27-ல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.

Advertisment

தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா. ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ஆம் ஆண்டில் இயற்பியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத்துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) திட்ட இயக்குனராக தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ஆம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற்றினார்.

பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருது, பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கி இந்திய ஆரசு அவரை கௌரவித்துள்ளது. இதுதவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் கலாம் பெற்றுள்ளார்.

Advertisment
Advertisements

கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற கலாம், 2007-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை மக்களின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

publive-image

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதியன்று சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது நினைவிடம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே பேக்கரும்பு பகுதியில் உள்ளது. அங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அவருக்கு பிரமாண்ட மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

publive-image

அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27-ம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அப்துல் கலாம் மணிமண்டபத்தை அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

publive-image

மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நாளை தனி விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்படர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தடையவுள்ளார். தொடர்ந்து, காலை சுமார் 11.30 மணியளவில் அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

publive-image

பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் முழுவதும் துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்துல் கலாம் மணிமண்டபத்தின் விஷூவல் காட்சிகள் சிலவற்றை இந்தக் கட்டுரையுடன் படங்களாக இணைத்துள்ளோம்.

Rameswaram Abdul Kalam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: