/tamil-ie/media/media_files/uploads/2018/04/a54.jpg)
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித் துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அருண் கோயல் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 4 பேர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுக்களை அனைத்தும் நீதிபதி திருநீல பிரசாத், முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை இன்னும் முடிவடைந்த நிலையில் ஜாமின் வழங்க கூடாது எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணை முடிவடையவில்லை என்ற சிபிஐ தரப்பு வாதங்களை ஏற்று அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் 4 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.