Advertisment

சென்னை விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இதுதான் காரணமா?

சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னை விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இதுதான் காரணமா?

சென்னை  விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Advertisment

சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மெயிலில்  வெடிகுண்டு வெடிக்கப்போகிறது.  மர்மநபர் விமானநிலையத்திற்கு வந்துகொண்டிருக்கிறார். மேலும் அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. மேலும் அந்த மர்ம நபர் பயணிக்கும் விமானத்திற்கு பெரும் ஆபத்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் உடனடியாக மற்றும் விமான பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக ஒரு  சோதனை நடத்தப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment