சென்னையில் இரண்டு பெண் ஐடி ஊழியர்கள், கார் மோதி உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஆர். லட்சுமி (23), திப்பதியை சேர்ந்த எஸ் லாவண்யா ஆகியோர் சென்னையில் உள்ள ஓஎம்ஆர்-ல் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் வேலையை முடித்துவிட்டு, சாலையோரமாக நடந்து சென்றுள்ளனர். அப்போது சாலையை கடந்து செல்ல முயன்றபோது, மாமல்லபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து இவர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதி தூக்கி வீசபட்ட இருவரும், கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்யும் முன்பே இருவரும் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் மொத்தீஷ் குமாரை பொது மக்கள் பிடித்து வைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“