Advertisment

இதனை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி சிதம்பரம்.... காத்திருக்கும் டெல்லி!

இறுதி முடிவு எட்டியவுடன், முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்படும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இதனை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி சிதம்பரம்.... காத்திருக்கும் டெல்லி!

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கினார். இதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அந்நிய முதலீடுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்பட 7 பேர் மீது 120(பி) கூட்டுச்சதி, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களையும், கணினி ஹார்ட் டிஸ்குகளையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி முடிவு எட்டியவுடன், முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment