Advertisment

சைக்கிளில் சென்ற சிறுவன்:  மோதிய கார்:வெளியான சிசிடிவி காட்சிகள்

கோவையில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
சைக்கிளில் சென்ற சிறுவன்:  மோதிய கார்:வெளியான சிசிடிவி காட்சிகள்

கோவையில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஷீத் இறைச்சி கடைக்காரர் என்பவரின்  மகன் ரைஃபுதீன் 3வது படிக்கும்  8 வயது சிறுவனான இவர் தான் வசிக்கும் தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த சையது முஹம்மது என்பவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று முன் தினம் 22-01-2023 அன்று காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்  சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் தடுப்பு சுவற்றின் மீது தூக்கி வீசப்பட்ட சிறுவனை அருகே உள்ள பொதுமக்கள்  மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக  வெரைட்டியால் சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு  போலீசார் சையத் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே  சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதும் பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment