வளிமண்டல மேலடுககு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலம் காரணமாகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பபுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று, மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 7 செ.மீ மழை பாதிவாகியுள்ளது.
இதேபோல, ஆம்பூர், பாம்பன் ஊத்தங்கரை தளி மற்றும் திருப்பத்தூரில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.