Advertisment

வார்டு கமிட்டிகளை அமைத்த சென்னை மாநகராட்சி: சாலைகளை சீரமைக்க ஏற்பாடு

சென்னை சாலைகளை உடனடியாக மறுசீரமைக்க, மண்டல வாரியாக ரூ.20 லட்சம் அவசர நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
pothholes

மழை பெய்யும் காலங்களில் சேதமடைந்த சாலைகளில் நீர்த்தேக்கங்கள் அதிகரிக்கிறது. இதனால் வாகனங்களில் பயணிக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

Advertisment

இதனை சீரமைக்க வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளை குழுக்கை வாரியாக பிரித்து, சென்னை மெட்ரோவாட்டர் உதவி பொறியாளர் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருங்கிணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகளை மேற்கொள்ள, சென்னை சாலை பெயர்களின் பட்டியலைப் பெற்று குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளும் என்றும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சாலைகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சாலைகளை உடனடியாக மறுசீரமைக்க, மண்டல வாரியாக ரூ.20 லட்சம் அவசர நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாக்கம், போரூர், பல்லாவரம், ஐயப்பந்தாங்கல் போன்ற சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழைக்குப் பிறகு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் சென்னையின் எல்லைக்குள் இருப்பதால், சென்னையுடன் சேர்த்து, மழைக்காலம் துவங்கும் முன், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment