சென்னை கோடம்போக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி 3 இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு தண்டவாளத்தை அவர்கள் கடக்க முயன்றதாகவும், அப்போது வேகமாக வந்த மின்சார ரயில் மோதி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயரிழந்தவர்கள் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி, மனோஜ் மற்றும் பிரசாந்த் என்பது தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தியதால், ரயில் வருவதை கவனித்திருக்க மாட்டார்கள் என்றும், இதனால் அவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.