Advertisment

சென்னையில் தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்து... சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10 பேர் காயம்!

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai, chennai accident, Government bus,

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள கண்ணகி நகரில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பதையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.இதனால், தாறுமாறாக ஓடிய பேருந்து சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 10 பயணிகளுக்கு லேசான காணம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment