Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/06/A590.jpg)
எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரம் தொடர்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "எம்.எல்.ஏ.சரவணன் பேர வீடியோ ஆதாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
Advertisment
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்கு பதில் தர கோரி பேரவை செயலர், சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுவும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.