தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 2-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ந் தேதி அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அக்டோபர் 2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனிடையே இந்த தடையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த நிலையில், செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்த ஊர்வலத்திற்கு நீதிமன்றம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தமிழக காவல்துறை இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்துள்ளதால் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டங்கள் நடந்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு வருகிறது. ஆனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையினர் இரவு பகல் பாராமல் மாநிலம் முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வரும் நவம்பர் 6-ந் தேதி அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனுமதி வழக்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ள நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை அக்டோபர் 31-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.