மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளை மாற்றி முறையான அறிவிப்பு வெளியிடாமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறந்திருக்க கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாமல் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை வெளியிட்ட சுற்றறிக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுபான கடைகளை கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மூடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு சண்டிகர் மாநிலம் தொடர்ந்த வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு மதுபான கடைகளை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்தி தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமலே நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளை மாற்றி முறையான அறிவிப்பு வெளியிடாமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறந்திருக்க கூடாது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாமல் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை சுமார் 1700 மதுகடைகளை திறக்க வெளியிட்ட சுற்றறிக்கை ரத்து செய்து உத்தரவிடனர். மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட அனைத்து கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நெடுஞ்சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு பொருந்தாது எனவும் தங்கள் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளனர்.