Advertisment

எம்.பி.பி.எஸ். 85 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
எம்.பி.பி.எஸ். 85 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்த அப்பீலை சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

Advertisment

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று வரை நடைபெறாமல் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதில், "மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும். கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.

மேலும், மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாடதிட்டங்களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக் கூடாது. மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். எனவே அந்த அரசாணையை ரத்து செய்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகலில் வழங்கப்பட்டது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், காலம் தாழ்த்தாமல் கலந்தாய்வை நடத்துமாறும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Chennai High Court Neet Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment