Advertisment

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு!

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேடியம்மாள் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மணல் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டதாக கூறி எனது கணவர் பாபுவை காவல்துறை கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். எனது கணவருக்கு எதிராக பிறப்பித்த குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராமதிலகம் அமர்வு முன் கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சாதராண பொது மக்கள் மீது இது போன்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறன்றன. ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டு இதை அனுமதிக்கும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக இன்று (8 ஆம் தேதிக்குள்) தமிழக அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் கடத்தலை அனுமதித்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது 7 ஆண்டுகளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும் போது பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் மணல் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது 4 வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்துறை செயலாளர், மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும், விசாரணை ஆணையத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மணல் கடத்தல் ஈடுபட்டதாக கைது செய்து, பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பாபு என்பவர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment