Advertisment

பிம்ஸ் மருத்துவ மாணவர்கள் நீக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிம்ஸ் மருத்துவ மாணவர்கள் 108 பேரை நீக்கம் செய்வது தொடர்பான புதுச்சேரி அரசு நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchipuram, Cheyyur, Chennai high court, Arasu R T, DMK, Munusamy, AIADMK,

புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கப்பட்ட 108 மாணவர்களை நீக்கம் செய்வது தொடர்பான புதுச்சேரி அரசு நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Advertisment

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் தனியார் மருத்துவ கல்லூரியான பிம்ஸ்சில் கடந்த (2016-17) கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்பட்ட 108 மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக செண்டாக் மாணவர்கள் - பெற்றோர்கள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறைக்கு கடந்த 7-ஆம் தேதி கடிதம் எழுதியது.

இதன் அடிப்படையில், புதுச்சேரி சுகாதாரத்துறை, இம்மாணவர்களை நீக்கம் செய்வது தொடர்பாக கடந்த 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, பிம்ஸ் கல்லூரியில் படித்து வரும் 108 மருத்துவ கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், 'எங்களின் மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்துள்ளது. நீட் தேர்வில் பெற்ற தகுதி மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தோம். தற்போது 2 ஆம் ஆண்டு படித்து வருகிறோம். ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தகுதி பட்டியலை, எம்.சி.ஐ.க்கு கொடுக்கவில்லை என்று செண்டாக் பெற்றோர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி அரசுக்கு, எம்.சி.ஐ. கடிதம் அனுப்பியது. அதன் பேரில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரியிடமோ, எங்களிடமோ கருத்து கேட்கவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்று மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.சி.ஐ. தரப்பில், இந்த மாணவர் சேர்க்கை விதிமுறைப்படி நடக்கவில்லை. நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் கமிட்டி கொடுத்த அறிக்கை அடிப்படையில்தான் எம்.சி.ஐ. கடிதம் எழுதியது. எனவே, இதில் தலையிட தேவையில்லை என்றும், மேலும், விரிவாக பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பில் முன் வைக்கும் வாதத்தில் ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதால், எம்.சி.ஐ. கடிதம் மற்றும் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் நடவடிக்கை தொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அதற்கு, மனுதாரர்கள் சார்பில் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் பதில் விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் செண்டாக் மாணவர்கள்- பெற்றோர்கள் சங்கத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். வழக்கு விசாரணை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment