Advertisment

தினமும் மின்சார ரயிலில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஒரு நற்செய்தி..இனி 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும்.

கூட்ட நெரிசல் மற்றும் ரயில் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian railways ticket booking

indian railways ticket booking

chennai local train timings : திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் வேலைக்கு லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த தகவல். ரயிலில் கூட்டம் படிக்கட்டில் நின்றாலும் வேறு வழியின்றி அலுவலகத்திற்கு நேரம் ஆகி விட்டதே என அறக்க பறக்க ஓடிச் சென்று ரயிலை பிடிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

Advertisment

அதுமட்டுமில்லை, ரயிலில் அதிகப்படியான கூட்டம் இருந்தாலும் படிக்கட்டிலே தொங்கிக் கொண்டே பயணமும் இனி வேணாம். கூட்ட நெரிசல் மற்றும் ரயில் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே இனி சென்னையில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

காலை நேரங்களில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு - திருமால்பூர்- அரக்கோணம் மார்க்கத்தில் இனி 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும்.

அதே போல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, செங்கல்பட்டுக்கும் அதிகப்படியான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இதுவரை வெறும் மகளிருக்காகவே அரக்கோணம் - வேளச்சேரி தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில்களில் இனி இருபாலனத்தவரும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடவே, சென்ட்ரல் - ஆவடி மற்றும் கும்மிடிபூண்டி - செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இனி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment