Advertisment

வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம்: ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது.

author-image
WebDesk
New Update
chennai bridge

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தினந்தினம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையை பயன்படுத்துவதால் இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment