சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று (ஜூலை 11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழும்பூர், அம்பத்தூர், அடையாறு, ஐடி காரிடார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
எழும்பூர்
கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜெகத்தம்மாள் கோயில் தெரு, சேத்துபட்டு, பாந்தியன் சாலை, மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்
டி.என்.எச்.பி கொரட்டூர் பாரதி நகர், முகப்பேர் சாலை, எம்.டி.எச். சாலை பாடி, கிழக்கு அவென்யூ, சென்ட்ரல் அவென்யூ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
அடையாறு
காந்தி நகர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஐஐடி-மெட்ராஸ், திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், டைடல் பார்க் துணை மின் நிலையங்கள் உட்பட அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடார்
பெருங்குடி மண்டலம், இ.டி.எல், சோளிங்கநல்லூர், தரமணி, தொரைப்பாக்கம், டி.எல்.எப் துணை மின் நிலையங்கள் உட்பட அனைத்து பகுதிகளும்.
பணிகள் முடிந்ததும் மதியம் 2 மணிக்குள் மின்விநியோகம் துவங்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“