Advertisment

கொரோனா: சரிவை சந்திக்கும் சென்னை; காரணம் இதுதான்!

தடுப்பூசி கவரேஜ் அதிகரிப்பு, நகரில் வழக்குகளைக் குறைப்பதில் முக்கியமானது என பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் நகர சுகாதார அதிகாரி டாக்டர் எஸ் மகாலட்சுமி கூறினார்.

author-image
WebDesk
New Update
Chennai-Covid-cases

the increase in vaccination coverage was crucial in bringing down the cases in the city-City Health Officer

தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும்  28,561 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சென்னையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஜனவரி 16 அன்று சென்னையில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகின, அன்று 8,987 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.  மேலும் வரும் நாட்களில் அதிக பாதிப்புகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், கடந்த நான்கு நாட்களாக, பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் நகர சுகாதார அதிகாரி டாக்டர். எஸ் மகாலட்சுமி, Indianexpress.com இடம் பேசுகையில், தடுப்பூசி கவரேஜ் அதிகரிப்பு, நகரத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைப்பதில் முக்கியமானது.

கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சந்தைகள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பிற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிப்பு, இவை அனைத்தும் தொற்றுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

"15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் ஆகியவை பாதிப்புகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாங்கள், இப்போது அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். மொத்தம் 200 குழுக்கள் பதினைந்து மண்டலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் லேசான, மிதமான மற்றும் கடுமையான பாதிப்புகளை கண்டறிந்து, தேவையான வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

கொரோனா தன்னார்வத் தொண்டர்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ள மக்களுக்கும், மற்ற தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கும் உதவுவதில் தங்கள் பங்கைச் செய்து வருகின்றனர்.

பாசிட்டிவ் நோயாளிகளுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படுகின்றன, அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை தங்கள் மதிப்புகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், அவர்களின் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு 92 க்கும் குறைவாக இருந்தால், உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், நாங்கள் அவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வோம்.

தேவைப்படுபவர்களுக்கு உதவ, அனைத்து மண்டலங்களிலும் டெலி-அழைப்பு வசதியும் உள்ளது.

சென்னையில் ஜனவரி 17 அன்று, மொத்தம் 8,591 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு நிலையில், ஜனவரி 18 அன்று 8,305 ஆகவும், ஜனவரி 19 அன்று 8,007 ஆகவும், ஜனவரி 20 இல் 7,520 ஆகவும் குறைக்கப்பட்டது.

சென்னையில் மொத்தம் 6,76,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 20 அன்று 8,011 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். தற்போது 62,007 பாதிப்புகள் செயலில் உள்ளன. வியாழக்கிழமை, நகரத்தில் 14 இறப்புகள் பதிவாகியுள்ளது, இது அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக உள்ளது.

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நகரத்தில் உள்ள பதினைந்து மண்டலங்களில், ஜனவரி 20 நிலவரப்படி,சோழிங்கநல்லூர் பகுதியில் அதிக பாதிப்புகள் (13.8 சதவீதம்) செயலில் உள்ளது. அதைத் தொடர்ந்து மணலி, 13.7 சதவீதமும், பெருங்குடி 12.9 சதவீதமும் உள்ளது.

வியாழக்கிழமை, மொத்தம் 4,646 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது, 5,296 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது. 20,072 பேருக்கு பூஸ்டர் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் முதல் அலையில் இருந்தே இந்த போக்கை தீவிரமாகப் பின்பற்றி வரும் தனியார் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த், நகரம் உச்சத்தைத் தொட்டுள்ளது என்றும், வரும் நாட்களில், பாதிப்புகள் குறையும் என்றும் கூறினார்.

டிசம்பர் 24 முதல் உள்ள போக்கின்படி, ஜனவரி 19 அன்று 62,512 செயலில் உள்ள பாதிப்புகளை பதிவு செய்து, நகரம் உச்சத்தை எட்டியது. வியாழன் அன்று, அது வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இது 62,007 ஆகக் குறைந்தது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment