Advertisment

எவ்வளவோ முறை எச்சரித்தோம்; சென்னை சில்க்ஸ் காதில் வாங்கவில்லை - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

சென்னை சில்க்ஸ் நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் கட்டிட இடிப்பிற்கு தடை வாங்கிவிட்டது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
எவ்வளவோ முறை எச்சரித்தோம்; சென்னை சில்க்ஸ் காதில் வாங்கவில்லை - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

32 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டாலும், பல இடங்களில் கங்குகள் புகையினை உமிழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு நான்கு மாடிகளுக்கு மட்டுமே சிஎம்டிஏ அனுமதி அளித்திருந்தது. ஆனால், அந்நிறுவனம் விதிமுறைகள் மீறி 8 மாடிகளை கட்டியுள்ளது. இதையடுத்து, நாங்கள் பலமுறை அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தோம். தொடர்ந்து, 5,6,7-ஆவது மாடிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சென்னை சில்க்ஸ் நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் கட்டிட இடிப்பிற்கு தடை வாங்கிவிட்டது. கட்டிட நிறைவு சான்றிதழை கூட அந்நிறுவனம் அரசிடம் பெறவில்லை.

தி.நகரில் மொத்தம் 86 கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீண்டகாலமாக இந்த விதிமுறை மீறல்கள் பிரச்சனை உள்ளது" என்றார்.

Minister Udumalai Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment