Today Tamil News : கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் அளிக்கும் விதமாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தற்காலிக தடுப்பூசி மையத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முதல் தொடங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்டு வரும் இந்த தாற்காலிக தடுப்பூசி மையங்களில், பொது மக்கள் விரும்பும் வகையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இருப்பினும், கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்காலிக தடுப்பூசி மையத்திற்கு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு மட்டுமெ செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கிடைக்கும் விபரங்கள் பற்றிய குறிப்புகளை வெளியிட்டது. அதன்படி, திங்கள் முதல் 63 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவினாலும், கோவிஷீல்டு தடுப்பு மருத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மையங்களுக்கு வரும் அனைவருக்கும் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனிடையே, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவக்கும் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்களை மே 1 முதல் தமிழக அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்யலாம் என்றாலும், மாநில அரசு அறிவிப்பின்படி கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”