சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கான ரயில் சேவை மற்றும் தகவல்தொடர்பு சேவை குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை மத்திய அமைச்சரிடம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழிசையின் கோரிக்கைகளை ஏற்ற இந்த உறுதியை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் வழங்கினார். இதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil