சொத்துவரி செலுத்த, காசோலை செலுத்தும் மெஷின் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகை மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில், காசோலை செலுத்தும் மெஷின் திறக்கப்பட்டுள்ளது. பிடரல் வங்கியுடன் சென்னை மாநகராட்சி இத்திடத்தை தொடங்கி உள்ளது. இதை மேயர் ப்ரியா தொடங்கி வைத்தார்.
இந்த காசோலை டெபாசிட் மெஷினில், நீங்கள் சொத்து வரி செலுத்த, காசோலையை டெபாசிட் செய்ய முடியும். சென்னை மாநகராட்சியின் முகவரியை குறிப்பிட்டு காசோலையை நாம் மெஷினில் செலுத்த வேண்டும். சில நாட்களில் நீங்கள் செலுத்திய பணம் சமந்தப்பட்டோருக்கு செல்லும்.
இந்நிலையில் நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலமாகவும், நெட் பேங்கிங் அல்லது யு.பி.ஐ மூலமாகவும் சொத்து வரி செலுத்த முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“