சென்னை 2.0 திட்டம்.. இரவு நேரத்தில் திடீர் விசிட் அடித்த இறையன்பு.. காரணம் என்ன?

452 சாலைகளை (78 கிலோமீட்டர் நீளத்திற்கு), 55 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற உள்கட்டமைப்பு சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படுகிறது.

452 சாலைகளை (78 கிலோமீட்டர் நீளத்திற்கு), 55 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற உள்கட்டமைப்பு சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
express image

Source: Twitter/ @chennaicorp

சென்னையில் உள்ள பிரதான சாலைகளை சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தொண்டியார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை தலைமைச் செயலாளர் வி.இறையன்பு சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Advertisment

சென்னையில் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் இருக்கும்படி, சாலை சீரமைப்பு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் களமிறங்கினர்.

சென்னை முழுவதும் செல்லும் பேருந்து வழித்தடச் சாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்றனர்.

இதில் 452 சாலைகளை (78 கிலோமீட்டர் நீளத்திற்கு), 55 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற உள்கட்டமைப்பு சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இதையடுத்து, தொண்டியார்பேட்டை மண்டலம் (மண்டலம் 4) முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூவில் மொத்தம் ரூ.13.95 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை, திரு.வி.க.நகர் மண்டலத்தில் இளங்கோ தெருவில் ரூ.6.98 மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலைகளை மறுசீரமைப்பு செய்யும்பொழுது, ரோலர் இயந்திரத்தால் ஏற்படும் அழுத்தம், சாலையின் தரம், நடைபாதையின் தரம், சாலையின் நடுவில் இருந்து விளிம்பு வரை உள்ள சரிவு நிலை ஆகியவற்றை சரிபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில், சாலை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இரவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த தினசரி அறிக்கையும் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, ஜிசிசி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மண்டல துணை கமிஷனர் (வடக்கு) எம்.சிவகுரு பிரபாகரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: