/tamil-ie/media/media_files/uploads/2017/07/edapadi-palanasami455-12-1491991915.jpg)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனத்திற்காக இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்கிறார். திருமலை-திருப்பதி வெங்கடாசலபதி திருத்தலத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்வதற்காக, குடும்பத்துடன் இன்று திருப்பதி செல்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி பி.ராதா, அவரது மகன் பி.மிதுன் மற்றும் ஜெ.சரண், உறவினர்கள் மாணிக்கம், எம்.சுசீலா ஆகியோர் செல்கின்றனர். அவர்களுடன் முதலமைச்சரின் உதவியாளர் எஸ்.கிரிதரன், பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ், பாதுகாவலர் என்.எஸ்.ரெட்டி, காவல்துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) ஜி.ராமர், துணைகண்காணிப்பாளர் (பாதுகாப்பு) சி.ராஜா ஆகிய 11 பேர் செல்வதாக கூறப்படுகிறது.
இன்று திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் மாளிகையில் தங்கவுள்ளதாகவும், அதன்பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு நாளைபிற்பகல், எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பவுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.