தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். நான் மோடியை சொல்லவில்லை, ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள் எப்போதும், அந்த ‘ரிங் மாஸ்டர்’ இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.
அதுவும், சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் கோமாளி வேடம். கோமாளியை பார்த்தீர்கள் என்றால், அப்பப்போ இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையை தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார் என்று கூறினார்.
இதற்கு இன்று சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில், "
சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது.
திமுக தலைவர் ஸ்டாலின், நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார். கட்சிக்குள் பிரிவினையை உண்டாக்கும் ஸ்டாலினின் முயற்சி தோல்வி அடைந்து உள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் சம்பள உயர்வை வழங்கி உள்ளோம். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் குறித்த கேள்விகளுக்கு, ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை?
திமுக கட்சி அல்ல... கம்பெனி என்பதை ஒப்புக்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.