Advertisment

திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல்வர் திடீர் ஆய்வு

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா, போதிய மருந்துகள் இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

பின்னர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் மகப்பேறுவதற்காக வந்திருந்த பெண்களிடமும் மருத்துவமனை அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் அங்கிருக்கும் உணவு கூடத்தில் முதல்வர் தயாரிக்கப்படும் உணவை ருசித்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment