Advertisment

ஏ.டி.எம் மெஷினை உடைக்காமல்; மின் இணைப்பை மட்டும் துண்டித்து... நூதன கொள்ளையால் அதிர்ந்த கோவை

ஏ.டி.எம்.கள் செயல்படாததாக புகார் எழுந்ததையடுத்து வங்கி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore ATM Theft

கோவை நகர சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் ஏடிஎம்களில் நடந்த ஏராளமான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கும்பல் நகரின் புறநகர் பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான ஏடிஎம் மையங்களை குறிவைத்து ரூ.3 லட்சத்தை எடுத்துள்ளது. இந்த கும்பல் பணம் எடுக்க உண்மையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியது, ஆனால் இயந்திரம் பணத்தை வழங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு ஏடிஎம் கியோஸ்க்கின் மின்சாரத்தை துண்டித்தது.

இதன் காரணமாக, பணம் எடுத்த போதும் "பரிவர்த்தனை தோல்வி (transaction failure) என்று கணினி பதிவு செய்ததாகவும், எனவே கணக்கு இருப்பு அப்படியே இருந்தது. இயந்திரம் சேதமடையாததால், அலாரம் அடிக்கவில்லை, என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

இயந்திரம் பணம் கொடுக்க இருந்த நிலையில், மின் இணைப்பை துண்டித்து இயந்திரத்தை முடக்கி உள்ளனர்.

இந்த முறை மூலம், அவர்கள் பணத்தை எடுத்த போதும், மின் தடையால் பணம் எடுத்ததற்கான பதிவேடு தொந்தரவு செய்யப்பட்டது.

எனவே பணம் எடுப்பது நிராகரிக்கப்பட்டதாகவும் மற்றும் கணக்கின் வங்கி இருப்பு அப்படியே இருந்தது என்றும் அது பதிவு செய்தது, என்று அதிகாரி கூறினார்.

ஏ.டி.எம்.கள் செயல்படாததாக புகார் எழுந்ததையடுத்து வங்கி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

நள்ளிரவில் பணம் எடுக்கும் முயற்சிக்குப் பிறகு ஏடிஎம்மில் மூன்று நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (declined transactions) பதிவாகியிருப்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர்கள் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது, ​​இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, என்று அதிகாரி மேலும் கூறினார்.

பரிவர்த்தனைகள் உண்மையானவை என்பதால், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கொள்ளையர்கள் தங்கள் முகத்தை மறைக்கவில்லை. சந்தேக நபர்களை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment