கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப அணி சார்பில் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் உமா கார்க்கியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் அனுமதி கேட்டு கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி இன்று மாலை 5 மணி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“