கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து: 5 பேர் பலி

கோவை பேருந்து நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை பேருந்து நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
accident, building collapse

கோவை பேருந்து நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

கோவை சூலூர் அருகே சோமனூரில் உள்ள பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து இன்று விபத்துக்குள்ளானது. அதில், சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

publive-image

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

publive-image

மழை காரணமாக பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஆனால், விபத்துக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கட்டட இடிபாடுகளுக்கிடையே மேலும் சில சிக்கிக் கொண்டுள்ளனர். எனவே, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: