/tamil-ie/media/media_files/uploads/2017/09/Coimbatore-bustand-accident.jpg)
கோவை பேருந்து நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவை சூலூர் அருகே சோமனூரில் உள்ள பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து இன்று விபத்துக்குள்ளானது. அதில், சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை காரணமாக பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஆனால், விபத்துக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கட்டட இடிபாடுகளுக்கிடையே மேலும் சில சிக்கிக் கொண்டுள்ளனர். எனவே, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.