ஆடு காணாமல் போச்சு... பொசுக்கென வந்த கோபம்... துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!
கோவை மேட்டுப்பாளையம் அருகே குடிபோதையில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்கிற சின்னத்தம்பி (55). இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர் அப்பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற சின்னச்சாமி பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
Advertisment
இதனையடுத்து இன்று (அக்டோபர் 9) காலை அவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உறவினர்கள் சென்றனர். இதுகுறித்து காரமடை போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்காக ரஞ்சித் என்ற இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னச்சாமி மற்றும் ரஞ்சித் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளதாகவும் அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித், சின்னச்சாமியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
போலீசார் ரஞ்சித்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது? வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கியா? என விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news