Advertisment

தேங்கிய மழை நீர்... அழுகிய காய்கறிகள்... கோவை வியாபாரிகள் வேதனை

கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
தேங்கிய மழை நீர்... அழுகிய காய்கறிகள்... கோவை வியாபாரிகள் வேதனை

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisment

இதில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்துள்ள நிலையில், மழைநீர் குளம் போல தேங்கி நிற்பதால் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த தக்காளி, வெங்காயம் உள்பட காய்கறிகள் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் வடியாததால் காய்கறிகள் அழுக தொடங்கியுள்ளன.

publive-image

மேலும் மழைக்காலங்களில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்துவிடுவதால் காய்கறிகள் அழுகி நாசமாக போய்விடுகிறது. மழை நீர் வடிந்தாலும் மார்கெட் முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதால் இதனால் வியாபாரம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் கடும் சிரமத்திற்குள் ஆகி வருகின்றனர்.

எனவே போர்க்கால அடிப்படையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சீரமைக்க வேண்டும். தொடர்ந்து மழை நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment